தந்தையின் கண் முன்னே உடல் நசுங்கி உயிரிழந்த குழந்தைகள்...! கோவையில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தை சார்ந்தவர் வெங்கடேஷ் (வயது 35). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இவரது மனைவியின் பெயர் லட்சுமி. இவர்கள் இருவருக்கும் கீர்த்தனா (வயது 7)., காயத்ரி (வயது 9) மற்றும் கார்த்திக் (வயது 10) என்ற குழந்தைகள் உள்ளனர். 

பணியின் காரணாமாக வெங்கடேஷ் குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணப்பன் நகர் பகுதியில் தங்கியிருந்து., கட்டிட பணிகளுக்கு சென்று வரும் நிலையில்., கீர்த்தனா 2 ஆம் வகுப்பும் மற்றும் காயத்ரி 4 ஆம் வகுப்பும் அங்குள்ள சங்கனூர் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். 

school, பள்ளிக்கூடம்,

கார்த்திக் அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் நிலையில்., இவர்கள் அனைவரையும் வெங்கடேஷ் தினமும் தனது மோட்டார் வாகனத்தில் அழைத்து சென்று பள்ளிகளில் விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்த நிலையில்., இன்று வழக்கம் போல தயிர் இட்டேரி பகுதியில் இவர்கள் அனைவரும் சென்று கொண்டு இருந்த நிலையில்., சாலையோரமாக இருந்த குப்பை தொட்டியில் மோதாமல் இருப்பதற்கு இரு சக்கர வாகனத்தை திருப்பிய நிலையில்., சாலையில் வந்து கொண்டு இருந்த லாரியின் மீது மோதியுள்ளது. 

இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் சென்ற அனைவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில்., லாரியின் முன் சக்கரத்தில் விழுந்த கீர்த்தனாவின் மீது லாரியின் சக்கரங்கள் எறியதில் சம்பவ இடத்திலேயே கீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்தார். 

died, murder, killed, suicide attempt,

மீதமுள்ள மூவரும் பலத்த காயத்துடன் துடிதுடித்த நிலையில்., இவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் அவசர ஊர்தியின் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூவரும் இருந்த நிலையில்., காயத்ரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்த தகவல் காவல் துறையினருக்கு தெரியவந்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore road accident baby died police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->