தாயாரை கொடூரமாக குத்தி கொலை செய்த மகன்..! விசாரணையில் வெளியான பேரதிர்ச்சி தகவல்...!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியை சார்ந்தவர் ஆரோக்கியமேரி (வயது 47). இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில்., இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். 

கணவரின் இறப்பிற்கு பின்னர்., பூர்வீகமாக இருந்த சொத்துக்களை வாடகைக்கு விட்டு., அதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தின் செலவுகளை கவனித்து வந்துள்ளார். இந்த சமயத்தில்., ஆரோக்கியமேரியின் மகனான அர்ஷத் (வயது 22) கல்லூரி படிப்பினை நிறைவு செய்து இருந்துள்ளார். 

college, காலேஜ், கல்லூரி, கல்லூரி பட்டமளிப்பு விழா, college graduation,

கல்லூரி படிப்பினை நிறைவு செய்து பணிகளுக்கு செல்லாமல் இருந்ததால்., வீட்டில் பணக்கஷ்டம் ஏற்பட துவங்கியுள்ளது. இதன் காரணமாக மகனை பணிக்கு செல்ல கூறி தாயார் வற்புறுத்தி வந்துள்ளார். 

மேலும்., இதனை ஏற்காத ஆர்ஷத் தாயாரிடம் எந்த சமயத்திலும் செலவிற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். குறிப்பிட்ட சமயத்திற்கு மேலாக பணம் வழங்க முடியாது என்று கூறி., சரியான முறையில் பணிக்கு சென்று சம்பாத்தியம் பார்க்குமாறு தாயார் கூறியுள்ளார். 

இதனால் கடும் ஆத்திரத்துக்கு உள்ளான ஆர்ஷத் தாயாரை கத்தியால் குத்தி கொலை செய்த நிலையில்., இரத்த வெள்ளத்தில் ஆரோக்கியமேரி சரிந்து வீழ்ந்து துடிதுடித்து உயிரிழந்துள்ளார். 

coimbatore mother killed by son, கோவை தாயாரை கொலை செய்த மகன்,

இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்., வீட்டிற்குள் விரைந்த சமயத்தில் ஆரோக்கியமேரி இரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., ஆரோக்கியமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., ஆர்ஷத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore mother killed by son due to no work


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->