குட்டையில் தத்தளித்து பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்.. வெளியான பகீர் வீடியோ பதிவு.. விசாரணையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி இராயர்பாளையம் பகுதியை சார்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகனின் பெயர் விக்னேஸ்வரன் (வயது 23). இவர் தறித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

இவருக்கு பரமேஸ்வரன்., புவனேஸ்வரன் மற்றும் மாதவன் ஆகியோர் விக்னேஸ்வரனின் நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று அங்குள்ள வடுகபாளையம் பகுதியில் இருக்கும் குட்டையில் சென்று குளிப்பதற்கு முடிவு செய்துள்ளனர். 

இதனையடுத்து நண்பர்கள் அனைவரும் குட்டையில் குளிக்க சென்ற நிலையில்., குட்டையில் குளித்த நேரத்தில் விக்னேஸ்வரன் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நீந்திக்கொண்டு இருக்கும் போது நீரில் திடீரென தத்தளிக்க துவங்கியுள்ளார். 

died, suicide attempt, killed, murder,

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் நண்பரை காப்பாற்ற முயற்சித்த நிலையில்., அவர் நீருக்குள் மூழ்ங்கியுள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீரில் மூழ்ங்கிய வாலிபரை சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டுள்ளனர். இதனையடுத்து அவரது அலைபேசியில் சோதனை செய்த சமயத்தில்., அவர் டிக்டாக் செயலியை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. 

மேலும்., குட்டையில் நீந்திக்கொண்டு இருக்கும் போது காளை மாட்டின் மீது எறியபடி டிக் டாக் செய்யத போது குட்டையில் முழ்ங்கி பலியானது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in coimbatore man died in lake using tic tok app


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->