ஒரே வாரத்தில்., 16 உயிர்களை காவு வாங்கிய மர்ம நபர்..! கண்ணீரில் மக்கள்.. கோவையில் பேரதிர்ச்சி.!!
in coimbatore 16 dogs killed police investigation going on
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் சுப்பையன் தெரு பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிந்து வந்துள்ளது. இந்த நாய்கள் மூலமாக அப்பகுதி மக்கள் இரவு வேளைகளில் நிம்மதியாக உறங்கி வந்துள்ளனர்.
மேலும்., இவர்கள் அனைவரும் இரவு வேளைகளில் உறங்கும் போது., தெருவில் உள்ள நாய்கள் வெளி ஆட்களின் நடமாட்டத்தை கவனித்து மக்களை உஷார் படுத்தி வந்துள்ளது.
இந்த நேரத்தில்., சுமார் 10 நாட்களுக்கு முன்னதாக இங்கு இருக்கும் நாய்களில் 10 நாய்களை மர்ம நபர் விஷம் வைத்து கொலை செய்துள்ளான். விஷம் உள்ள உணவை அறியாத நாய்கள் அனைத்தும் உணவை சாப்பிட்டு அங்குள்ள பகுதியில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்துள்ளது.
இதனால் மக்கள் பெரும் துயருக்கு உள்ளாகி இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்த நிலையில்., மேலும் 3 நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு இருந்துள்ளது.
இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அழிக்கப்பட்ட நிலையில்., இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in coimbatore 16 dogs killed police investigation going on