மகனை கூலிப்படை ஏவி கொலை செய்த தாய்.. தந்தையும் இல்லாது, தெருவில் நிற்கும் 3 பெண் குழந்தைகள்..!! விசாரணையில் பகீர்.!!
in chennai son murder due to mother illegal affair
சென்னையில் உள்ள ஆவடி அருகேயிருக்கும் கன்னிகாபுரம் பகுதியை சார்ந்தவர் அஞ்சலி. இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூன்று பெண் பிள்ளைகள் இருந்தாலும், ஆண் பிள்ளை என்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சதீஷ் என்ற குழந்தையை சிறுவயது முதல் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
சதீஷிற்கு தற்போது 19 வயதாகும் நிலையில், அஞ்சலியின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதற்கு பின்னர் அஞ்சலி தனது மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த தருணத்தில், அஞ்சலிக்கும் - இப்பகுதியை சார்ந்த காமராஜ் என்பவருக்கும் கள்ளகாதலானது மலர்ந்துள்ளது. இந்த விஷயம் சதீஷிற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சதீஷ் காமராஜை கண்டித்துள்ளார்.
இதனையடுத்து கள்ளக்காதல் மோகத்தில் என்ன இருந்தாலும் தனது வளர்ப்பு மகன் என்ற எண்ணத்தை நியாபகபடுத்திய அஞ்சலி, தனது மகனை கொலை செய்ய கள்ளக்காதலனுடன் சேர்த்து திட்டம் தீட்டியுள்ளார்.
இவர்களின் திட்டப்படி சதீஷை சமாதானம் செய்வதாக கூறி அழைத்து சென்ற காமராஜ், மது போதையில் இருந்த சதீஷை கூலிப்படை மூலமாக கொலை செய்துள்ளார். சதீஷை கொலை செய்த கும்பல் மற்றும் கள்ளக்காதல் ஜோடி சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
சதீஷின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் பேரதிர்ச்சி தகவலாக மேற்கூறிய தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai son murder due to mother illegal affair