விளக்கு தீ பிடித்து உடல் கருகி பலியான பெண்மணி.! சென்னையை உலுக்கிய சோகம்.!!
in chennai girl died karthigai light fire
தமிழகத்தின் சென்னையில் உள்ள வேளச்சேரி விஜயநகர் பகுதியை சார்ந்தவர் சுரேந்தர். இவர் மின்வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவியின் பெயர் சுஜாதா (வயது 72). இவர் நேற்று கார்த்திகை தீபத்தினையொட்டி வீட்டில் விளக்குகளை ஏற்றிக்கொண்டு இருந்துள்ளார்.
இந்த சமயத்தில்., இவரது வீட்டில் இருந்த விளக்கில் எதிர்பாராத விதமாக சேலை பட்டு., தீப்பிடித்து இருந்துள்ளது. தீ மளமளவென பரவவே பதறிப்போன சுஜாதா அலறித்துடித்துள்ளார். இவரின் அலறல் சப்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் விரைந்து சுஜாதாவை மீட்டுள்ளனர்.
பின்னர் வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில்., இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இது தொடர்பான தகவலை அறிந்த வேளச்சேரி காவல் துறையினர்., சுஜாதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும்., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைப்போன்றே திருவெற்றியூர் கார்கில் நகர் பகுதியை சார்ந்தவர் செல்வம். இவரது வீட்டின் அருகே மாட்டுக்கொட்டகை அமைத்து மாடு மற்றும் உயர் இரக கோழிகளை வளர்ந்து வரும் நிலையில்., கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அப்பகுதியை சார்ந்தவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர்.
இந்த நிலையில் பட்டாசு எதிர்பாராத விதமாக அங்கிருக்கும் வைக்கோலில் விழுந்து தீப்பிடித்து இருந்துள்ளது. வைக்கோல் மளமளவென எறிந்த நிலையில்., வைக்கோலுக்கு அருகில் இருந்த கன்றுக்குட்டி மற்றும் 20 க்கும் மேற்பட்ட கோழிகள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தது.
சுமார் 13 மாடுகள் மற்றும் 4 கன்றுக்குட்டிகள் பலத்த தீக்காயமும் அடைந்தது. இதனால் செல்வம் பெரும் சோகத்திற்கு உள்ளனர். இதுமட்டுமல்லாது சென்னையில் உள்ள 6 பகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும்., வேளச்சேரியில் பெண்ணொருவர் தீக்காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai girl died karthigai light fire