அதிகாலையில்.. இடி மின்னலுடன் கனமழை.!! ஜில்லென மாறிய வெயிலூர்.!!
Heavy rain falled in Vellore today early morning
வெயிலுக்கு பேர் போன வேலூரில் கடந்த சிலர் மாதங்களாகவே கோடை வெயில் ருத்ர தாண்டவம் ஆடி வரும் நிலையில் சில நாட்களாக மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.
இருப்பினும் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்த பாடில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். காலை 7 மணிக்கு வெயிலின் தாக்கம் உச்சத்தை தொடுவதால் அலுவலகத்திற்கு செல்வோர் வேர்த்து விறுவிறுத்து செல்வார்கள்.
இந்த நிலையில் இன்று அதிகாலை வேலூரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், பேரணம்பட்டு, குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காய்ந்து போன பயிர்கள் எல்லாம் தற்போது துளிர்விடத் தொங்கும் என விவசாயிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.
அதே போன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மழை பெய்யும் போது சுமார் 30 முதல் 40 கிலோ மட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Heavy rain falled in Vellore today early morning