மனநலம் பாதிக்கப்பட்டு, பச்சிளம் மகளுடன் தற்கொலை செய்து கொண்ட தந்தை... கதறியழுத மனைவி... சென்னையில் கண்ணீர் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையை அடுத்துள்ள மாதவரம் பகுதியை சார்ந்தவர் திருப்பதி ரெட்டி (வயது 35). இவரது மனைவியின் பெயர் சுனிதா. இவர்கள் இருவருக்கும் ஹரிஷ் என்ற 7 வயதுடைய மகனும், ஹரிகா என்ற 5 வயதுடைய மகளும் உள்ளனர். 

திருப்பதி ரெட்டி அங்குள்ள பாரிமுனை பகுதியில் இருக்கும் தனியார் கிட்டங்கியில் கணக்காளராக பணியாற்றி வரும் நிலையில், இவர் கடந்த சில வருடமாக மனஅழுத்த பிரச்சனையால் அவதியுற்று வந்துள்ளார். இந்த பிரச்சனையை சரி செய்ய மதுரவாயல் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று மாலை திருப்பதி வீட்டில் இருக்கும் மூன்றாவது தளத்திற்கு ஹரிகாவுடன் சென்றுள்ளார். 

இவரது மனைவி மற்றும் மகன் இல்லத்தில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், மகளை தூக்கி சென்ற திருப்பதி வீட்டின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே மகளுடன் குதித்துள்ளார். 

இதில் படுகாயமடைந்த தந்தை மகள் இருவருமே சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த செய்தியை கேட்டு அதிர்ந்து போன மனைவி இருவரின் உடலை கண்டு கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளையில், இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai father suicide with child


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->