மருந்து வாங்க சென்ற நண்பர்களுக்கு அரங்கேறிய சோகம்.. அரியலூரில் பரிதாபம்.!!
in ariyalur accident friends died
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் வெற்றியூர் பகுதியை சார்ந்தவர் கரிகாலன். இவரது மகனின் பெயர் சூரியகுமார் (வயது 26). இதே கிராமத்தை சார்ந்தவர் முருகானந்தம். இவரது மகனின் பெயர் பத்மநாபன் (வயது 27).
சூர்யகுமாரும், பத்மநாபனும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் நிலையில், நேற்று முன்தினத்தின் போது அங்குள்ள மருத்துக்கடைக்கு சென்று மருந்து வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர்.
இவர்களின் இரு சக்கர வாகனம் தஞ்சாவூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளூர் பாலத்திற்கு அருகே சென்ற சமயத்தில், வாகனத்தின் சக்கரம் பழுதாகவே, வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சக்கரத்தை கழற்றியுள்ளனர்.
இந்த நேரத்தில், இப்பகுதியில் எதிர்திசையில் வந்த தாய் சேய் நலவாகனம், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், வாகனம் வயல்வெளிக்குள் சென்று கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தலைமறைவாகவே, இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in ariyalur accident friends died