அ.தி.மு.க.விற்காக பிரசாரம் செய்வேன்..டி.டி.வி. தினகரன் சொல்கிறார்! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. அழைத்தால் வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநயாக கூட்டணியில் அ.தி.மு.க.விற்காக பிரசாரம் செய்வேன். 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வேன்' என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு பதிவிக்கலாம் அடுத்த ஆண்டு 2026 இல் நிறைவடைகிறது.இதையடுத்து 2026 ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர்.தமிழக சட்டசபை  தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அதிமுக கூட்டணியில் மீண்டும் பாஜக கைகோர்த்துள்ளது.மேலும அந்த கூட்டணியில் பல கட்சிகளை இணைக்க அதிமுக முயற்சித்து வருகிறது.மேலும் திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது,தேர்தல் நேரத்தில் எந்த எந்த கட்சிகள் அந்த கூட்டணியில் இருக்கும் என்பது தெரியும்.

இந்தநிலையில்  பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் இருந்தபோதும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பா.ஜ.க. இடம் அளித்தது. தமிழகத்தில் கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும். அதை அமித்ஷா ஏற்கனவே கூறிவிட்டார். அ.தி.மு.க. அழைத்தால் வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநயாக கூட்டணியில் அ.தி.மு.க.விற்காக பிரசாரம் செய்வேன். 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வேன்' என அப்போது அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I will campaign for the AIADMKTTV Dhinakaran says


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->