திருப்பூர்: மனைவியிடம் தகராறு செய்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் மனைவியிடம் தகராறு செய்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சிவகுமார் (வயது42). இவர் முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சிவகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடையே தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து மீண்டும் நேற்று மது குடித்துவிட்டு வந்து மனைவியிடையே தகராறு செய்த சிவக்குமார், வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார்.

இதைப்பார்த்த மனைவி அதிர்ச்சி அடைந்த நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்ற போது சிவக்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாராபுரம் காவல்துறையினர், உயிரிழந்த சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரயோத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband suicide in Tiruppur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->