கணவனை கொன்றதற்கு இதுதான் காரணம்? கைதான மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


தர்மபுரி, கீரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 40). இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி கனகா (வயது 34). கடந்த 1 ஆம் தேதி ராஜன் மர்மமான முறையில் உயிரிலிருந்து கிடந்தார். 

இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் அவரது மனைவி கனகாவிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது கணவனை கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். 

மேலும் விசாரணையில், தினமும் கணவர் மது போதையில் வீட்டிற்கு வந்து பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் உடல்நிலை சரியில்லை என தெரிவித்தாலும் தன்னை துன்புறுத்தி தகாத வார்த்தைகளில் திட்டி தன்னை தாக்கிய போது நானும் அவரை சரமாரியாக தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து போலீசார் கனகா மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

husband killing wife Arrested 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->