மனைவி மீது சந்தேகம்.. மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை..!
Husband Kill His Wife Near Krishanagiri
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கொச்சை ஊர் பகுதியை சேர்ந்தவர் பாசப்பா. இவரின் முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதால் மாதவி என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக பசப்பா மற்றும் மாதவி கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாதவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிற.து சம்பவத்தன்று தாய் வீட்டிற்கு சென்று இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அவர் மாதவியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தலைமறைவானார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக பசப்பாவை தேடி வந்த நிலையில் அவர் தனது சொந்த ஊரான கீழ் கொச்சாவூர் வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அவரை கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Husband Kill His Wife Near Krishanagiri