#திருப்பூர் || மனைவியின் நடத்தையில் சந்தேகம்.! கத்தியால் குத்தி கொன்ற கணவர் கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கத்தியால் குத்தி கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் வள்ளுவர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(70). இவர் கிளி ஜோதிடம் பார்த்து வந்தார். இவரது மனைவி கற்பகம்(60).

இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் கணவன்-மனைவியிடையே தகராறு முற்றிய நிலையில் நேற்று இரவு குடிபோதையில் இருந்த கிருஷ்ணன் ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த கத்தியால் மனைவி கற்பகத்தை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் கற்பகம் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கணவர் கிருஷ்ணனை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband arrested for stabbing wife in Tiruppur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->