ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...! - ஊருணியில் மிதந்த சடலத்தால் சிவகங்கையில் பெரும் பரபரப்பு...!
horror that befell girl who went graze goats huge commotion Sivaganga body floating river
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகேயுள்ள மேலப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜராஜசோழனின் மகள் அபிநயா (12), 7-ம் வகுப்பு பயின்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்ததால், அவர் வீட்டிலேயே இருந்து வந்தார்.நேற்று முன்தினம் அபிநயா தனது தாயாருடன் ஆடுகளை மேய்க்க சென்றிருந்தார்.

அப்போது ஆடுகளை கவனித்து கொள்ளுமாறு மகளிடம் கூறிவிட்டு, அவரது தாயார் வீட்டிற்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் மாலை நேரம் கடந்தும் அபிநயா வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பதற்றமடைந்தனர்.
ஆடுகள் மட்டும் வீட்டை வந்தடைந்த நிலையில், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், அப்பகுதியில் உள்ள ஊருணி நீரில் அபிநயா உயிரிழந்த நிலையில் மிதந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மதகுபட்டி காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உயிரிழப்பு மேலப்பூங்குடி கிராமத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்திற்கான காரணம் குறித்து காவலர்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணம் முழுமையாக தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
horror that befell girl who went graze goats huge commotion Sivaganga body floating river