ஹுக்கா பார் : தடை விதித்த தமிழக அரசு.. ரூ.50 ஆயிரம் வரை அபராதம்.! - Seithipunal
Seithipunal


இன்று தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- 

"தமிழகத்திற்கு ஏற்ற வகையில் சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் சட்டம்-2003-ஐ, திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. 

இந்த திருத்தத்தின் மூலம் புகைப்பிடித்தல் மேலும் ஒழுங்குபடுத்தப்படுகிறது. சென்னையில் புகைக்குழல் கூடங்கள் எனப்படும் ஹுக்கா பார் அதிக அளவில் பெருகி உடல் நலனுக்கு மிகக் கொடிய சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த சேவையை பல உணவகங்களும், புகைப்பிடிக்கும் பகுதியை வழங்கி, புகைப்பிடிப்பதை அனுமதித்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் புகைக்குழல் கூடத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் எதுவும் இல்லை. 

எனவே சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் சட்டம்-2003-ஐ திருத்தி, புகைக்குழல் கூடத்தை தடை செய்யவும், அதை மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்து தண்டனை அளிக்க முடிவு செய்துள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா இன்று சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பிற்குப் பின்பு நிறைவேறியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hookha bar ban tn govt order


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->