ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோன்று சென்னையை பொறுத்தவரை அமைந்தகரை, அம்பத்தூர், மதுரவாயல், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், பொன்னேரி, மாதவரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. ஏற்கனவே முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை விழாவுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மாவட்ட முழுவதும் கனமழையின் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Holiday for all schools and colleges in Ramanathapuram district!


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->