ரெட் அலர்ட்: நாளை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
Holiday declared for schools and colleges in Puducherry and Karaikal tomorrow
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதுச்சேரியில் நாளை அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் நாளை (அக்டாபர் 22) அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட், காரைக்காலில் நாளை கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 22) விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Holiday declared for schools and colleges in Puducherry and Karaikal tomorrow