நாமக்கல்: மொபட் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் மொபட் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் மணப்பள்ளி தெற்கு தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி தண்டபாணி(45). இவர் நேற்று முன்தின இரவு மோகனூரில் இருந்து வீட்டிற்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது பரமத்தி வேலூர் சாலை அருகே சென்ற போது மோகனூர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக தண்டபாணி மொபட் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தண்டபாணி அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தண்டபாணி அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுயடுத்து இந்த விபத்து குறித்து தண்டபாணி மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt bus Moped accident in namakkal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->