அரசு கலை & அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பம் நிறைவு.. 2.44 லட்சம் பேர் விண்ணப்பம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளை தேர்வு செய்து படிக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு கடந்த மே 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.

அதன்படி, மே 8ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில்  www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடந்த மே 19ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அந்த வகையில் இன்று (மே 22 ஆம் தேதி) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மொத்தம் 2.44 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Govt Arts and science college 2.44 lakhs applications


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->