பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான ஒரு இயக்கம் - ஆளுநர் ஆர்என் ரவி பரபரப்பு பேச்சு.!
Governor RN Ravi Say About PFI
வன்முறையை தூண்டுபவர்கள் பயங்கரவாதிகள் தான் என்று, தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.
அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டும் நபர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் தான் என்று, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.
அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த ஆளுநர், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான ஒரு இயக்கம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக இந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டு வருவதாகவும் ஆளுநர் தனது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாணவர்களை போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் முகமூடியாக செயல்படுவதாக தமிழக ஆளுநர் குற்றம் சாட்டி பேசினார்.
English Summary
Governor RN Ravi Say About PFI