அரசு ஊழியரின் உயிரை பறித்த கட் ஆப் மார்க் - சிவகங்கையில் சோகம்.!!
government employee sucide for lowest cut off mark
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் நடராஜன். மாற்றுத்திறனாளியான இவர் ஏற்கனவே குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திருப்புவனம் யூனியனில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இதற்கிடையே குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்று நேர்முக தேர்வு வரை சென்றுள்ளார். அங்கு அவருக்கு கட் ஆப் மார்க் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை என்று மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நடராஜன், மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த அவரது தந்தை ராஜேந்திரன் திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
government employee sucide for lowest cut off mark