#காஞ்சிபுரம் || இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து.! வாலிபர் பலி.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வினய் குமார்(25) என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் வினய் குமார் நேற்று ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிரே வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக வினய் குமார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட வினய் குமார் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வினய்‌ குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government bus twowheeler accident in kanchipuram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->