#ஈரோடு || மேம்பால தூணில் அரசு பேருந்து மோதி விபத்து.! 15 பயணிகள் காயம்.!
Government bus accident in erode
ஈரோட்டில் அரசு பேருந்து மேம்பால தூணில் மோதிய விபத்தில் 15 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 8.45 மணியளவில் ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து ஊட்டியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது.
அப்பொழுது ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதிக்கு அருகே முன்னால் சென்ற தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து அங்கிருந்த மேம்பாலத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் கால், தலையில் பலத்த காயமடைந்து உள்ளார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 15 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Government bus accident in erode