குட்டையில் குளிக்க சென்ற சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்.. சடலத்தை சுற்றி வந்த வளர்ப்பு நாய்..! - Seithipunal
Seithipunal


குட்டையில் குளிக்க சென்ற மாணவிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்  மாவட்டம், அத்திப்பழகனூர் பகுதியில் உள்ள குட்டையில்  அந்த பகுதியை சேர்ந்த ஜனனி, ரட்சணா ஸ்ரீ ஆகிய இருவரும் விடுமுறையில்  அந்த குட்டையில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பொதுமக்கள் அவர்களின் சடலத்தை மீட்டனர்.

பொதுமக்கள் காவல்துறையினட் தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் ரக்சனா ஸ்ரீயின் வளர்ப்பு நாய் அவரின் உடலையை சுற்றி வந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. அவரது சடலத்தை மீட்டு கொண்டு செல்லும் போது பின்னரே நாய் ஓடி சென்றனது.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girls Drowns in to water Near Namakkal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->