நண்பரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்.. போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சொக்கநாதன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 45).

இவர் ஆடு வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கேட்டு சம்பாதிக்கும் தொழில் செய்து வருகிறார். இதன் மூலம் இவருக்கும் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் வியாபாரம் தொடர்பாக நட்பு இருந்துள்ளது.

இந்த நிலையில் ஜெயபால் ஆழ்வார்குறிச்சி சென்றபோது நண்பரின் 15 வயது மகளை  பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதில் ஜெயபாலின் தொந்தரவு தாங்க முடியாத சிறுமி தான் அணிந்திருந்த உடையில் தீ வைத்து தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஜெயபால் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் ஜெயபால் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Friend daughter sexual Harrasment in Alangulam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->