திருநெல்வேலி மாவட்டம்.! 14 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் 14 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள நெருஞ்சி காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவரது 14 வயது உடைய மகள் தனுசியா அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று செல்வன் மற்றும் அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டதால், வீட்டில் தனியாக இருந்த தனுசியா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து வீடு திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பணகுடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fourteen year old girl commits suicide by hanging in Tirunelveli


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->