நள்ளிரவில்.. முன்னாள் அமைச்சர் காலமானார்.!! சோகத்தில் உடன்பிறப்புகள்.!!
Former DMK minister Indira Kumari passed away
திமுக இலக்கிய அணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான இந்திரகுமாரி அவரது 73 வது வயதில் உடல் நலக்கறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அதிமுகவின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் நேற்று இரவு உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்திர குமாரின் உயிர் இழப்பு திமுகவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் இந்திர குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின் "கழக இலக்கிய அணி தலைவர் புலவர் இந்திர குமாரி அவர்கள் மறைந்த துயர செய்து வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திர குமாரி அவர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்கு பணியாற்றியவர். தீரா தமிழ் பற்றுடன் இலக்கிய வேளையில் இயங்கியவர்.
அவரது மறைவு கழகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திர குமாரி அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Former DMK minister Indira Kumari passed away