நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் பெண் வேட்பாளர்களுக்கு திமுக எம். பி கனிமொழி அட்வைஸ்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் அரசியல் கட்சிகல் சுயட்சை வேட்பாளர்கள் என பலமுனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், காலையில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றன.

தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அப்பாஸ் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

பிரச்சாரத்தின் போது மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. மக்கள் எழுச்சியாக, மகிழ்ச்சியாக  உள்ளனர்.  திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. இதனால் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெறும் என தெரிவித்தார்.

மேலும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு நிறைய திட்டங்கள்  கொடுக்கப்பட்டுள்ளன அது இந்த தேர்தலில் பிரதிபலிக்கும் என்றார்.

அதனை தொடர்ந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு மக்கள் பிரச்சனைகளை தீர்த்து தங்களது அரசியல் களத்தை பலப்படுத்தும் வாய்ப்பாக மாற்றி கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

For female candidates who win in urban local elections MP Kanimozhi Advice


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->