கடலில் சிக்கிய மீனவர்கள் சடலமாக மீட்பு.. சோகத்தில் குடும்பத்தினர்..! - Seithipunal
Seithipunal


கடல் சீற்றத்தில் சிக்கி மாயமான மீனார்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மங்களேஸ்வரி நகரில் இருந்து நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பும் போது எதிர்பாராத விதமாக அவர்கள் கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்தது.

அதில், படகில் பயணித்தவர்கள் கடலில் மூழ்கினர். அவர்களில் இருவரை சக மீனவர்கள் மீட்டனர். மற்ற இருவரும் கடலில் மாயமாகினர்.  அவர்களை தேடும் பணியில் மீனவர்களும், கடலோர காவல் படையினரும் ஈடுப்பட்டனர். இதனை அடுத்து, மாயமான இருவரும் சடலமாக மீட்டக்கப்பட்டனர்.

இருவரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fisherman Death in Ramanathapuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->