உயிருக்கு பயந்து கடலில் குதித்து ஒருவர் பலி! கரோனா பீதியால் நேர்ந்த விபரீதம்!!
Fisherman death due to afraid for coronavirus
சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் இதனை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் கரோனா தொற்றுக்கு பயந்து மீனவர் ஒருவர் கடலில் குதித்து நீந்தி கடக்க முயன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 20 மீனவர்கள் மங்களூரில் இருந்து கடல் வழியாக வந்து கொண்டிருந்த போது முருகன் என்னும் மீனவர் வளங்கள் கடல் பகுதியில் குதித்து நீந்தி கரைக்கு செல்ல முயன்றபோது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருடன் வந்த மற்ற 19 நபர்களும் உயிருடன் கரை சேர்ந்துள்ளனர்.
உயிரிழந்த முருகனின் உடலை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டு வந்து உடற்கூறு ஆய்வு செய்ய இருக்கின்றனர்.
English Summary
Fisherman death due to afraid for coronavirus