ஆன்லைன் ரம்மியால் கொலைகாரனாக மாறிய தீயணைப்பு வீரர் - நாமக்கல்லில் பரபரப்பு.!
fire service man arrested for murder in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே குச்சிக்காடு தோட்டத்தை சேர்ந்த சண்முகம் - நல்லம்மாள் தம்பதியினர் கடந்த அக்டோபர் மாதம் 12ம் தேதி, இருவரும் ரத்த வெள்ளத்தில் வீட்டில் கிடந்துள்ளனர். இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், வீட்டில் இருந்த 8 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டதில், இந்த கொலையில் ஈடுபட்டது தீயணைப்புத் துறையில் பணியாற்றிய ஜனார்த்தனன் என்பது தெரியவந்தது.
அவரிடம் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஜனார்த்தனன் ஆன்லைன் சூதாட்டத்தில் பெரிய அளவில் பணத்தை இழந்ததால் தனியாக இருந்த மூதாட்டி இருவரையும் அடித்து காயப்படுத்தி, நகைகளை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் ஜனார்த்தனனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைத்தனர். தீயணைப்புத் துறையில் பணியாற்றும் வீரர் ஒருவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, பணத்தை இழந்து, கொலைகாரனாகவும் மாறி இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
fire service man arrested for murder in namakkal