விருதுநகர்! தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


விருதுநகரில் தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் பாண்டியன் நகரில் அப்பண்ணசாமி என்பவருக்கு சொந்தமான கோகிலா எண்ணெய் தயாரிப்பு ஆலை அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென்று ஆலையில் தீ பிடித்துள்ளது.

தீயானது மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, கடும் போராட்டத்திற்குப் பின்பு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் அலையில் இருந்த இயந்திரங்கள், எண்ணெய் உட்பட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

மேலும் இந்த தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire at an oil production company in virudhunagar


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->