விழுப்புரம் : டயர் கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து..! - Seithipunal
Seithipunal


டயர் கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் அப்போ என்பவருக்கு சொந்தமான ரீ டயர் கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் திடீரென அந்த கடையில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தகவல் அளித்தனர்.

 விரைந்து வந்த அவர் கடையின் கதவை திறந்து பார்த்தபோது கடையில் தீ பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல் துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire Accident At Vizhupuram


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->