மருத்துவமனை கழிப்பறையில் பெண் சிசு சடலம்.. பிறந்து சில மணி நேரங்களே நிகழ்ந்த சோகம்..காவல்துறை தீவிர விசாரணை..!
Female infant corpse within hours of birth in hospital toilet
மருத்துவமனை கழிவறையில் இருந்து பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
தஞ்சை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. இந்த பிரிவில் பெண்களுக்கான மேற்கத்திய கழிவறை ஒன்று நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இந்த கழிவறையில் இன்று பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை சிசுவின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் பெண் ஒருவர் அந்த கழிவறைக்குள் சென்று 5 நிமிடம் கழித்து வெளியே வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதனை அடுத்து, அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுள்ளது.
English Summary
Female infant corpse within hours of birth in hospital toilet