கனமழை எதிரொலி.. குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
February 4 school holiday in Thanjavur and pudhukottai due to heavy rain
கனமழை காரணமாக தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி திருநெல்வேலி, நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையானது இன்றும் தொடர்ந்து பெய்து வருவதால் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
English Summary
February 4 school holiday in Thanjavur and pudhukottai due to heavy rain