மருமகனை அறிவாளால் வெட்டிய மாமனார்.! பெரம்பலூர் அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் மருமகனை மாமனார் அறிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (30). இவர் அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சியப்பன் என்பவரின் மகள் பிரதீபாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் முருகேசன் மனைவி பிரதீபாவை தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரதீபாவின் தந்தை கொளஞ்சியப்பன், முருகேசனை அறிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து மருமகனை அறிவாளால் வெட்டிய மாமனார் கொளஞ்சியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father in law arrested for cutting son in law with sickle in Perambalur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->