புதுச்சேரி || மகன் மீது வழக்குபதிவு.. தந்தை செய்த விபரீத செயல்..!
Father Committed Suicide
மகன் கைது செய்யப்பட்டதால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த விழிதியூர் சங்கரன் தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகையன். இவருக்கு கார்த்திசேன் என்ற மகன் இருக்கிறார். டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கார்த்திகேசனை கைது செய்திருப்பதாகவும் மறுநாள் காவல் நிலையத்திற்கு வருமாறும் நேற்று இரவு முருகையன் செல்போனுக்கு மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது.
இதனை அடுத்து அவர் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை தோட்டத்திற்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மனைவி அவரை தேடி சென்றார்.
அப்போது வீட்டின் அருகே உள்ள மரத்தில் அவர் தூக்கில் தொங்கியுள்ளார். அக்கம்பக்கதினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.