மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த குறும்பபாளையம் பகுதியில் பசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன் (48). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கோபாலகிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், மது அருந்திவிட்டு வந்த கோபாலகிருஷ்ணன் 12ஆம் வகுப்பு படித்து வரும் தனது மூத்த மகளிடம் குடி போதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கோபாலகிருஷ்ணனின் மனைவி கவிதா அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father arrested for sexually harassing daughter in Tiruppur


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->