பெற்றெடுத்த மகள் என்று கூட பாராமல் 4 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு.! போக்சோவில் தந்தை கைது.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் பெற்றெடுத்த மகள் என்று கூட பாராமல் 4 வருடங்களாக பாலியல் தொந்தரவு செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். 

அந்தப் புகார் மனுவில் தனது கணவர் கூலி வேலைக்கு செல்கிறார். அவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து தன்னை அடித்து காயப்படுத்தி தொந்தரவு செய்வதாகவும், அவரது கொடுமையை தாங்க முடியவில்லை, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சுதந்திரதேவி அந்த தம்பதியின் 13 வயது மகளிடம் விசாரணை மேற்கொண்டதில், அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகின.

தினமும் மது அருந்தி விட்டு வரும் கூலித் தொழிலாளி மது போதையில் மனைவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, மது போதையில் மகள் என்று கூட பாராமல் சிறுமியையும் கடந்த 4 வருடங்களாக பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக கூலித் தொழிலாளியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ய வீட்டிற்கு விரைந்து சென்றனர். ஆனால் இதனை அறிந்த கூலித் தொழிலாளி தலைமறைவாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து ஆலங்குளம் தனிப்படை போலீசார் அவரை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதில் செல்போன் சிக்னல் மூலம், கூலித் தொழிலாளி சாத்தான்குளம் பகுதியில், இருப்பதை அறிந்த போலீசார், விரைந்து அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த தொழிலாளியை கைது செய்தனர். 

இதையடுத்து இன்று அதிகாலை ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட கூலி தொழிலாளியை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father arrested for sexually harassing daughter in thenkasi


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->