தர்மபுரி காவல் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி மரணம் ...! காரணம் என்ன...?
farmer who set fire died at Dharmapuri police station What is the reason
தர்மபுரியில் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் 52 வயதான 'ஜெயராமன்' என்ற விவசாயி. இவர் கோழிப்பண்ணை நடத்தி அதன் வருவாய் மூலம் வாழ்ந்து வந்தார்.
இவர் கடந்த 4-ந்தேதி, தனது உறவினரிடம் கொடுத்த நில பத்திரத்தை மீட்டு தர கோரி தர்மபுரி மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.

அப்போது திடீரென அந்த வளாகத்தில், அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதை யாரும் எதிர்பாராததால் அங்கிருந்தோர் அவரை உடல் கருகிய நிலையில் காப்பாற்றினார்.
அவரின் உடலை காவலர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுத் தொடர்பாக தர்மபுரி டவுன் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
farmer who set fire died at Dharmapuri police station What is the reason