தர்மபுரி அருகே பரிதாபம்.! யானை மிதித்து விவசாயி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் யானை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் முக்குலம் பெரிய மொரசுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி வேடி (55). இவரது மனைவி குந்தியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை வேடி, அப்பகுதியில் உள்ள ஏரிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்று உள்ளார். அப்பொழுது அங்கிருந்த யானை ஒன்று இவரை பின் தொடர்ந்து உள்ளது. இதைப்பார்த்த வேடி அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். ஆனால் விடாமல் துரத்திச் சென்ற யானை வேடியை காலால் மிதித்துள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக வேடி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் வேடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer killed by elephant attack in dharmapuri


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->