குடும்பத்தகராறு: புதுமண தம்பதி எடுத்த விபரீத முடிவு!
Family Dispute Newlywed couple made a disastrous decision
காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தியமங்கலம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சந்திரன். 23 வயதான இவரும் இண்டியம்பாளையம், சின்ன கரடு பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினியும் காதலித்து கடந்த 7 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் 2 பேரும் புதுக்கொத்துக்காடு பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தம்பதி இருவரும் சின்ன கரடில் உள்ள பிரியதர்ஷினியின் பெற்றோர் வீட்டுக்கு சென்று மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு தம்பதி இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில், நேற்று காலை அங்குள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் சந்திரனும், பிரியதர்ஷினியும் பிணமாக மிதந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கிணற்றுக்குள் இருந்து மீட்டனர். மேலும் கடத்தூர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தியமங்கலம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்,குடும்பம் நடத்துவது தொடர்பாக 2 பேரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
English Summary
Family Dispute Newlywed couple made a disastrous decision