தமிழகத்தின் பிரபல மூக்குப்பொடி நிறுவனத்திற்கு வந்த சோதனை..? மெசினோடு சிக்கிய கூட்டம்.. நெடுநாட்களாய் போட்ட ஆட்டம்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் போடியில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மூக்குப்பொடி தயாரித்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பிரபல மூக்குப்பொடி தயாரிப்பு நிறுவனமான டி.எஸ்.பட்டணம் பொடி என்ற பெயரில் போலியான மூக்குப்பொடி தயாரிக்கப்படுவதாக சில மாதங்களுக்கு முன் அந்நிறுவனத்தினர் மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸாரிடம் புகார் செய்திருந்தனர்.

அதன் பேரில் போடி மேலச்சொக்கநாதபுரம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்த முத்தழகு என்பவரை கைது செய்து அவரிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட மூக்குபொடி பாக்கெட்டுகள், இயந்திரங்கள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இதே பெயரில் போலி மூக்குப்பொடி விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து போடி பகுதியை சேர்ந்த மேற்படி நிறுவனத்தின் டீலர் போடியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே போலியாக மூக்குபொடி தயாரித்து சிறைக்கு சென்று ஜாமீனில் வெளி வந்த மேற்படி முத்தழகு என்பவர் மீண்டும், டி.எஸ்.பட்டணம்பொடி என்ற பெயரில் போலி லேபிள்கள் தயாரித்து அதில் போலியான மூக்குப்பொடி நிரப்பி விற்பனை செய்தது தெரிந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போடி நகர் காவல் நிலைய போலீஸார் அவரிடமிருந்து போலியாக தயாரித்த மூக்குபொடி பண்டல்கள், போலி லேபிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fake-mooku-podi-case


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->