செக் மோசடி வழக்கில் சிக்கிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.!!
Fake check forgery actor power star seenivasan
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி ( வயது 55). இவர் வங்கியில் கடன் பெறுவதற்காக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனிடம் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளார்.
பவர் ஸ்டார் சீனிவாசன் வங்கியில் இருந்து கடனை பெற்று தராததால், கொடுத்த பணத்தை முனுசாமி திரும்ப கேட்டு உள்ளார். இதனை அடுத்து பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.14 லட்சத்திற்கு செக் வழங்கி உள்ளார். வங்கியில் பணம் இல்லாத காரணத்தினால் செக் திரும்பியது.
இதனையடுத்து, முனுசாமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடிகர் பவர் ஸ்டார் மீது செக் மோசடி வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு நேற்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு நடிகர் பவர் ஸ்டார் ஆஜராகாததால், வழக்கை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தது நீதிமன்றம்.
English Summary
Fake check forgery actor power star seenivasan