அது தற்கொலை அல்ல.. இரட்டை கொலை! கணவன் கைது! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே நடந்த இரட்டை கொலை நிகழ்வு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளோடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கவின் பிரசாத், பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி அமராவதி (28) மற்றும் ஒரு வயதான மகன் ஆதிரனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு வீடு திரும்பிய கவின், மனைவி, குழந்தையுடன் இரவு உணவுக்கு பிறகு உறங்கியிருந்தார். ஆனால் அதிகாலை 3 மணியளவில் விழித்த போது, மனைவி அருகில் இல்லாததை கவனித்தார். பின்னர் வீட்டை தேடியபோது, அமராவதி தூக்குபோட்டு மரணமடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, வீடு திரும்பிய கவின், தொட்டியில் மகன் ஆதிரன் மரணமடைந்ததும் தெரியவந்தது. சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பத்தில், அமராவதி தான் மகனை கொன்று, பின்னர் தற்கொலை செய்ததாக தோற்றம் ஏற்பட்டது.

ஆனால், மேலதிக விசாரணையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. மனைவியிடம் சந்தேகம் ஏற்பட்டதால், அவர் மற்றும் குழந்தையையும் கொலை செய்ததாக கணவர் கவின் பிரசாத் ஒப்புக்கொண்டார். நாடகம் நடித்து உண்மையை மறைக்க முயற்சி செய்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த இரட்டை கொலை சம்பவம், வெள்ளோடு பகுதியை உலுக்கியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

erode Murder case husband Arrest


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->