கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட ஒட்டுமொத்த குடும்பம் ..! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(39). விவசாயி.  மனைவி சுரேகா (36). இவர்களுக்கு  யோகிதா(16) என்ற ஒரு மகளும், மோகனன் (11) என்ற ஒரு மகனும் உள்ளனர். 

மகள் மதுரையில் உள்ள பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார் . மகன் பாலமேட்டில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படிது வருகிறார். முருகன் தனது குடும்பத்துடன் குலமங்கலம் அருகே உள்ள ஒரு கொய்யா தோட்டத்தை போக்கியத்திற்கு எடுத்து அங்கேயே தங்கி வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று இரவு தனது முருகன் தனது உறவினர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது குடும்பத்துடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் தங்களை மீட்டு அடக்கம் செய்து விடுங்கள் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்து தொலைபேசியை சுவிட்ச் ஆப் செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

அந்த உறவினர் உடனடியாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையிலான போலீசார் அந்தத் தோட்டத்தில் உள்ள கிணற்றை  பார்த்தபோது குடும்பத்தினர் அனைவரும் மிதந்துக் கொண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 பின்னர் அலங்காநல்லூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றினர். அதில் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இறந்த நிலையில்,  முருகன் மட்டும் கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார் . 

இந்நிலையில், முருகன்  மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சம்பவ இடம் விரைந்து வந்த சமயநல்லூர் சரக டி.எஸ்.பி பாலசுந்தரம் மற்றும் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

entire family committed suicide in the well


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->