மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மின் கட்டண உயர்வு: மறுபரிசீலனை செய்ய அமைச்சர் முத்தரசன் அறிவிப்பு..!
Electricity tariff reconsidered minister mutharasan pressmeet
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தெரிவித்ததாவது,
"இலங்கையில் உள்ள தமிழக மக்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டும்.இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழ்நிலையில் தமிழக அரசு சார்பில் மருந்து, உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. தற்போது தமிழக மக்கள் வசிக்கும் இடங்களை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
இதனால் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியுள்ளது. எனவே தமிழக மக்கள் வசிக்கும் இடங்களை விட்டு ராணுவம் வெளியேற வேண்டும். தமிழர்களின் உரிமைகள், உடைமைகளை மீட்டெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மேலும், இலங்கையில் உள்ள தமிழக மக்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசின் விலை ஏற்றத்தால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று வர தெரிவித்துள்ளார்.
English Summary
Electricity tariff reconsidered minister mutharasan pressmeet