11ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை.! மின்வாரிய ஊழியருக்கு வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த மின்வாரிய ஊழியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் சேர்ந்தவர் நவீன் குமார்(25) மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நவீன்குமார் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர், நவீன் குமாரின் பெற்றோரிடம் கூறி, நவீன்குமாரை கண்டிக்க வலியுறுத்தினர்.

இதனால் நவீன் குமார் ஆத்திரமடைந்து பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியின் கையைப் பிடித்து என்னை காதலிக்கிறாயா இல்லையா? என தகராறு செய்துள்ளார். இதைப் பார்த்த பகுதியில் இருந்தவர்கள் நவீன் குமாரை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் மாணவியின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான நவீன் குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electricity Board employee to love torture 11th class girl in karur


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->