திருவண்ணாமலை அருகே சோகம்.! கிணற்றில் மூழ்கி எலக்ட்ரீசியன் பலி.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் கிணற்றில் குளித்த போது நீரில் மூழ்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் சீனிவாசன் (34). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சீனிவாசன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் வந்தவாசி அடுத்த கீழ்குவளைவேடு கிராமத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளார்.

இதையடுத்து தனது நண்பர்களுடன் கீழ்குவளைவேடு கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து சீனிவாசன் தங்கி இருந்த நிலையில், நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார்.

ஆனால் சீனிவாசனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதையடுத்து அவரது நண்பர்கள் சீனிவாசனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியாத நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி சீனிவாசனை பிணமாக மீட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electrician dies after drowning well in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->